-சு.ரவி

 

“சின்னஞ் சிறிய உன் சிந்தைக்குள்ளே

என்னென்ன கனவுகள் நிகழ்கின்றவோ!

 

அன்னை அணைத் துன்னைக் கொஞ்சினளோ-அவள்

ஆசைமுகம் அங்கே தோன்றியதோ

பின்னணி யாயவள் தீங்குரலில்-ஒரு

பாடலும் காதினில் கேட்கின்றதோ

 

வண்ணங்கள் நாட்டியம் ஆடினவோ-ஏழு

ஸ்வரங்களும் வானவில் ஆயினவோ

கண்ணனும், கந்தனும் உன்னுடனே- உன்]

கனவினிலே விளையாடினரோ

 

கண்ணிமை மூடியுன் கையினிலே-பட்டுக்

கன்னம் அழுந்திடத் தூங்குகிறாய்

வண்ண ரோஜாஇதழ் மொட்டினைப்போல்-செப்பு

வாயைச் சுழித்து உறங்குகிறாய்

 

கண்மணியே உந்தன் சொப்பனத்தில்-நீ

காண்பதெல்லாம் இங்கே தீட்டிவிட

வண்ணமில்லை, ஒரு வார்த்தையில்லை-இதை

ரசிப்பதல்லாதொரு வாழ்க்கையில்லை!”

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “சின்னஞ் சிறிய உன் சிந்தைக்குள்ளே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.