சின்னஞ் சிறிய உன் சிந்தைக்குள்ளே…
-சு.ரவி
“சின்னஞ் சிறிய உன் சிந்தைக்குள்ளே
என்னென்ன கனவுகள் நிகழ்கின்றவோ!
அன்னை அணைத் துன்னைக் கொஞ்சினளோ-அவள்
ஆசைமுகம் அங்கே தோன்றியதோ
பின்னணி யாயவள் தீங்குரலில்-ஒரு
பாடலும் காதினில் கேட்கின்றதோ
வண்ணங்கள் நாட்டியம் ஆடினவோ-ஏழு
ஸ்வரங்களும் வானவில் ஆயினவோ
கண்ணனும், கந்தனும் உன்னுடனே- உன்]
கனவினிலே விளையாடினரோ
கண்ணிமை மூடியுன் கையினிலே-பட்டுக்
கன்னம் அழுந்திடத் தூங்குகிறாய்
வண்ண ரோஜாஇதழ் மொட்டினைப்போல்-செப்பு
வாயைச் சுழித்து உறங்குகிறாய்
கண்மணியே உந்தன் சொப்பனத்தில்-நீ
காண்பதெல்லாம் இங்கே தீட்டிவிட
வண்ணமில்லை, ஒரு வார்த்தையில்லை-இதை
ரசிப்பதல்லாதொரு வாழ்க்கையில்லை!”
சந்த நயத்துடன் கூடிய அருமையான பாடல். ராகத்துடன் பாடி ரசிக்க முடிகிறது. அருமையான பகிர்விற்கு நன்றிகள் பல.
An absolute pleasure to read. keep them coming! Applause 🙂
அருமை.
அப்படியே இந்தப் படத்தையும் பாருங்கள்
https://lh5.googleusercontent.com/-Q3U3TKJ_VlQ/UZeNN3rmQ8I/AAAAAAAC8yo/Hw3yr9L6haE/w506-h671-o/photo.jpg