நாளை புத்தக வௌயீட்டு விழா அழைப்பிதழ் – ஈஸ்வரனின் சிறுகதைகள்

0

மறவன்புலவு சச்சிதானந்தம்

eswaran invite31.8.13 (1)

அண்ணை, கண்ணீரை வரவழைத்தார் அந்த எழுத்தாளர் என்றார் தொலைப்பேசியில் அழைத்த திருமதி அங்கயற்கண்ணி.

யார்? என்று கேட்டேன்.

பெயர் சரியாக விளங்கவில்லை. இப்பொழுது (29.8.13 வியாழக்கிழமை காலை 0730 மணி) கேட்டுக் கொண்டிருக்கிறேன், இலங்கை வானொலியில் அவரது செவ்வி.

அப்படி என்ன சொன்னார்? கேட்பவரை ஏன் அழ வைக்கிறார்?என்றேன்.

உங்களைப் பற்றிச் சொன்னவை எனக்குக் கண்ணீரை வரவழைத்தன. நீங்கள் அவருக்குக் கொடுத்த உற்சாகமே, ஊக்கமே, ஆதரவே, வழிகாட்டலே அவரைச் சிறுகதை எழுத்தாளராக்கியதாம் என்று உணர்ச்சிவசப்பாட்டார் திருமதி அங்கயற்கண்ணி.

அந்த எழுத்தாளர் காந்தளகத்தைப் பாராட்டினார். அங்கு பணி புரியும் திருமதி சசிரேகாவைப் பாராட்டினார். முன்பு தன் வாழ்க்கை அநுபவங்களை எழுதினாராம். இப்பொழுது சிறுகதைத் தொகுதி வெளிவந்திருக்காம், புகழ் பூத்த வானதிப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்களாம் என்றார் திருமதி அங்கயற்கண்ணி.

ஓ.. ஈசுவரன் பேசுகிறாரா? அவர் என் நண்பர். வானொலியில் செவ்வியைக் கேட்டு முடிந்ததும் நேரே அவருடன் பேசுங்கள் எனக் கூறிய நான் திரு. ஈசுவரனின் தொலைப்பேசி எண் கொடுத்தேன்.

ஈசுவரன் எனக்கு நண்பர். 1959இல் தொடங்கிய நட்பு. அவரது 72ஆவது பிறந்த நாளுக்குக் கொழும்பில் அவரது விருந்தோம்பலை ஏற்ற செய்தியை எழுதினேன்.

நாளை மறுநாள் 31.8.13 சனிக்கிழமை மாலை 0630 மணி) . கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் ஈசுவரினின் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா, நான் கலந்துகொண்டு பாராட்டிப் பேச உள்ளேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.