திருமால் திருப்புகழ் (8)
கிரேசி மோகன்
தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன -தனதான….
———————————————————————————————————-
ஆல வாயினில் செத்துணர் வுற்றவர் நானை யாரென கற்றுடல் விட்டவர்
சோணை மாமலை உற்றது ரைத்திடு -ரமணேச
ஞான மாமுனி செப்பிய சத்தினில் நானும் வாழயில் பற்றுவி ருப்பினை
கீதை நாயக விட்டுவி ரக்தியில் -விஜயோனாய்
தோளி லாளிடும் விற்கணை விட்டது போல யாவையும் விட்டுயர் வெற்றியை
வாழும் நாளிலே வெற்றிலை வட்டிலில் -எளிதாக
ராஜ யோகமும் ,பக்தியும் ,கர்மமும் ஞான மார்க்கமும் வைத்தருள் இக்கணம்
ராசா லீலையில் முக்திய ளித்திடும் -குருநாதா
கால நேமிவ லக்கரம் விட்டிட ஆழி ஊதலி டக்கரம் பற்றிட
தோளி லாடிட விற்சுமை மற்றிரு -கதைவாளை
ஆளு மாதவ விக்ரம சொப்புரு வான வாமன நச்சர வத்துயில்
ஆதி நாரண உச்சரி பத்திரு -திருநாமம்
நாளு மோதிட நற்கதி பெற்றுயர் வான வாசலில் விட்டுவின் நித்திய
சூரி யாகுவர் இப்பிற விப்பிணி -குணமாகும்
கோல மாமயி லைப்புகழ் கற்பக பாலி ஈசனின் பக்கஅ கத்துறை
சீனு வாசம கத்துவ மைத்துன -பெருமாளே”
————————————————————————————————