கிரேசி மோகன்

images (1)

தந்ததான தான தான தந்ததான தான தான
தந்ததான தான தான -தனதான….

——————————————————————————————————————————-

“எம்பிரானும் வேதம் ஓதும் அன்னவாக னாரும் காண images (2)
மண்ணைவானை மீறு மேனி -கிரிசோணை
தன்னில்தேக வாசம் போக அன்றுஆல வாயில் சாவை
வென்றுதீர னாக மேவு -ரமணேசர்

கொம்புஞானம் காண காலில் தெம்பிலாத மூடன் வாயில்
கொஞ்சமேனும் தேனை சேர -அருள்வாயே
கங்கையோடன் தோள்கு லாவி அஞ்சுமானை நீயும் கூட
என்றுகூறு தோழ பாவ -ரகுராமா

அண்ணல்சோகம் தீர வானில் பொங்குமாழி மீது தாவி
அன்னைவாழும் சேதி கூறும் -அனுமானின்,
அஞ்சனாவின் சேயின், வாயு மைந்தனாரின், வாசி ஈசன்
அம்சனாரின் நேச மான -சகவாசன்

நம்பினோர்கள் நாளில் கோளில் துன்புறாது கோயில் வாசல்
அன்பினோடு தாழி டாது -சிலையோடு
அம்புறாவும் தோளில் ஆட தம்பியோடு தாரமொடு
கும்பகோண ராம சாமி -பெருமாளே”
———————————————————————————————————————

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *