திருமால் திருப்புகழ் (11)
கிரேசி மோகன்
தந்ததன தந்தனம் தந்ததன தந்தனம்
தந்ததன தந்தனம் – தந்ததான….
———————————————————————————————————————–
“சஞ்சலமொ ழிந்திடும் சிந்தைமவு னம்பெறும்
செங்கிரிய மர்ந்திடும்-வெங்கடேசன்
பின்புரம ணன்சொலும் அந்தர்முகம் சென்றிடும்
அன்பரின கந்தையுளம்-எந்தநாளும்
அஞ்சலென சென்றமரும் அந்தரிசி வன்பதம்
அந்தவழி சென்றிடும்-நெஞ்சுதாராய்
சங்கொடுசு ழன்றிடும் செந்திகிரி தண்டமும்
நந்தகிவில் தங்கிடும் -அங்கையோடு
பஞ்செனப டர்ந்திடும் செந்திருக ரம்தரும்
சங்கமசு கம்பெரும் -ரங்கநாதா
வந்திரணி யன்பலம் வென்றவனை கொன்றிடும்
கம்பமுறை சிங்கமுகம் -கொண்டமாலே
தஞ்சமென வந்துதன் செஞ்சரண்அ டைந்ததும்
தம்பிமுறை தந்திடும் -அஞ்சனாவின்
பஞ்சமுகம் கொண்டவன் இந்திரியம் வென்றவன்
அந்தஅனு மன்தொழும் -எம்பிரானே”……..