திருமால் திருப்புகழ் (14)
கிரேசி மோகன்
தான தத்தன தானதத்தன
தான தத்தன தானதத்தன
தான தத்தன தானதத்தன-தந்ததான….
———————————————————————————————————————–
“தாம சத்தொடு ராஜ சத்தினை
தூய சத்வமும் தான கற்றிவி
சார யுக்தியில் நானொ ழித்துளம் -சம்புவாக
மோன நிட்டையில் மூழ்கி பக்தரின்
ஞான சத்குரு வாய்ச கத்தினில்
சோணை வெற்படி வார முற்றவர் -சொன்னவாறு
மாம முத்தமிழ் வேல வர்க்கபி
ராமி சக்தியின் நேச முற்றச
கோத ரத்துவ, வாழ வைத்திடு -செங்கண்மாலே
வாத பித்தக பாதி சர்க்கரை
சோகை ரத்தவி யாதி உற்றுவ
யோதி கத்தினில் சாயு மக்கணம் -நொந்திடாது
ராம தத்துவ தார கத்தினை
நாளும் செப்பிடு யோக பக்தியில்
நார தற்கிணை யாய்நி லைத்திடல் -தந்திடாயோ
ராச தத்துவ லீலை யுற்றெமு
னாந திக்கரை கோபி யர்க்கென
ஞான பக்குவ காம நர்த்தன -நந்தலாலா
நேமி சக்கிர ,கூவும் நிர்பய
ஆழி ,விற்தொகை, வாளும், மொத்திடும்
கோலும் உற்றுல கேழும் ரக்ஷனை -தந்துபோகும்
சீர ணைத்திட சேட மெத்தையில்
சீற லைத்தவ யோக நித்திரை
நீல பத்தும நாப நிர்குண -எம்பிரானே”
—————————————————————————————————————————————-