திருமால் திருப்புகழ் (15)
கிரேசி மோகன்
தான தத்த தானா தனந்தன தான தத்த தானா தனந்தன
தான தத்த தானா தனந்தன -தனதான….
———————————————————————————————————————–
“சீதம் முத்தி சாவாய் முடிந்திட மாலை இட்டு மாரார் மயங்கிட
ஓலை கட்டி நாலாள் சுமந்திட -வனமேகி
சூடு பட்டு சோறாய் அவிந்திட கூடு விட்டு பேயாய் அலைந்திடும்,
வேடன் தொட்டு வாவா விளம்பிட -உனதாவி
ஓதும் முத்தி சோணா சலந்தனில் வாழும் சித்தர் நானார் விளம்பலில்
ஞான முற்று தானாய் விளங்கிடும் -சுகமேவ
ஆழி சத்தம் ஆகா முழங்கிட சேட மெத்தை மீதே வளர்ந்திடும்
யோக நித்ரை மாலே வழங்கிட -வருவாயே
மாது சக்தி பாகா னசங்கரன் தோடு குத்தும் காதோ ரமந்திரம்
ஓது வித்த ஓமா திமைந்தனின், -மகமாயி
ஆதி சக்தி ஆகா ரமுண்டவள் வீர சக்தி வேலா ளுகின்றவன்,
சூரை குத்தி கூறாய் வகிர்ந்தவன், -முறைமாம
ஏது புத்தி அய்யா முணங்கிடும் ஏழை கத்தல் ஏனோ மறந்தனை
ஆத ரிக்க வாராய் அனந்தச -யனசாமி
போதி சத்வம் வேணாம், முகுந்தனுன் பாடல் பெற்ற ஆழ்வார் தலங்களில்
பாடும் பக்தி வாநாள் உகந்திடு -பெருமாளே”
படத்திற்கு நன்றி : தினமணி