திருமால் திருப்புகழ் (19)
கிரேசி மோகன்
—————————————————————————————————————————-
“யாதுமாகி நின்றாய் யாதவா முகுந்தா
கோதையாகி வந்தாய் காளையார் கலந்தாய்
சீதரா சுமந்தாய் ஜோதியாய் உகந்தாய்
யாவர்தோழன் தந்தாய் தாயுமா னதந்தாய்
பேதைநான்ம கிழ்ந்தேன் பாடலாய் வளர்ந்தாய்
போகுமூர்ம றந்தேன் பாதையாய் விரிந்தாய்
ஆதலால்கி ளர்ந்தேன் ஆதிசே டரங்கா
கீதையாக வந்தே காதிலோ துசிங்கா”
————————————————————————————————————————–