மலர் சபா

புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை
கண்ணகியும் கோவலனும் கவுந்தி அடிகளை வணங்கி, சாபத்தை நீக்கியருள வேண்டுதல்

கவுந்தியடிகள் இட்ட சாபம்
தவத்தின் பயனாய் விளைந்த சாபம் என்பதால்
சபிக்கப்பட்ட இருவரும்
என்ன என்று உணரும் முன்னே
அச்சாபம் பலித்து விட்டது.
அவ்விருவரும் உடனே
நரி உருவம் கொண்டு
ஊளையிட்ட படி ஓடினர்.

அந்தச் சத்தம் கேட்டு
நறுமலர் அணிந்த கண்ணகியும் கோவலனும்
“அறநெறியிலிருந்து விலகிச் சென்ற
இவர்கள் இங்ஙனம் பேசுவது
அவர்களின் அறியாமையால்தான்..
சிறந்த தவம் செய்தவரே!
இக்கயவர்கள் இச்சாபம் நீங்கி வாழும்
கால எல்லையையும்
நிங்கள் தயவுசெய்து கூறவேண்டும்”
என்று கவுந்தியடிகளிடம் வேண்டினர்.

கவுந்தியடிகள் சாபத்துக்கு எல்லை கூறுதல்

“தமது அறியாமையால் இழிபிறப்பு பெற்ற இவர்கள்
உறையூர் மதிற்புறத்தில் காவற்காட்டில்
பன்னிரு மாதங்கள் அலைந்து திரிந்து
தம் நிலையை நினைத்து வருந்திய பின்
இவர்கள் தங்களுடைய
பழைய உருவம் பெறுவார்களாக” என்று
கவுந்தியடிகள் சாபவிமோசனம் தந்தார்.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  233 – 244

http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *