கே. ரவி
ஏதாயினும் சொல் ஏனிந்த மெளனம்
எங்கெங்கும் பொழியட்டும் பூமழையே
காதோரம் வந்து சி றகடிக்கும் காற்றில்
ஒலிக்கட்டும் ஒருமுறை உன்குரலே
(ஏதாயினும்)
நீதானே எந்தன் கவிதையின் ஊற்று
தினமொரு தீபமென் சிந்தையில் ஏற்று
(ஏதாயினும்)
ஆதாரம் நீயே அனுபவச் சுவையே
ஆவியில் அமுதம் நிறைப்பவளே
ஆகாயமெல்லாம் எதிரொலிக்கும் – நீ
ஆணையிட்டால் உடன் அதுபலிக்கும்
(ஏதாயினும்)
பாதாதி கேசம் பாட வல்லேன் அல்லேன்
பாவனை சுகத்தில் மூழ்குகிறேன்
பாராமுகம் எதற்குத் திரைவிலக்கு – இன்னும்
பாராமுகம் எதற்குத் திரைவிலக்கு – இசைப்
பாடலொன்றே நம் சுடர்விளக்கு
(ஏதாயினும்)
படத்திற்கு நன்றி:
http://www.hindudevotionalblog.com/2011/09/goddess-saraswati-hindu-goddess-of.html

Leave a Reply