திருமால் திருப்புகழ் (95)
கிரேசி மோகன்

———————————————-
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————–
’’கண்ணன் அந்தாதி’’
————————————

அதுஆதி அந்தம், அதற்கில்லை பந்தம்,
அதனால், ‘இது’அது ஆகும், -அதுதான்,
அரியென்(று) அறிவால், அறிய அனைத்தும்,
சரியாகச் சேரும் சுகம்….(81)
சுகமுனி சாட்சி, இகபர ஆட்சி,
பகவான் கதைபடிப் போர்க்கு, -முகுந்தன்,
அறிமுகம் கொள்வீர், அரிமுகம் கூட்டும்,
அறம்பொருள் இன்பம் அகம்….(82)
அகந்தை இறக்குமங்(கு), ஆன்மா பிறக்கும்,
புகழ்ந்திகழ்ந்த வாசனை போகும், -மகிழ்ந்திருப்போம்,
ஆரா அமுதத்தில், ஆனந்த சாகரத்தில்,
நாரா யணஓம் நம….(83)
நமநம என்றவனை, நச்சரிப்பாய் நாமம்,
கமகமக்கும் நாவால் கணமும், -எமனெதிர்,
வந்தாலும் அச்சமின்றி, நந்தமகன் அச்சுதன்,
சொந்தம் நமக்கென்று, சொல்….(84)
சொல்லிப் புரிவதில்லை, சீதரன்தன் ஆதரவு,
நெல்லிக் கனியாவான் நம்கையில், -அல்லும்,
பகலும் அவனிரு, பாதம் சரணாய்ப்,
புகுந்தவர்க்(கு) அல்லும், பகல்….(85)
—————————————————————————————————————
படங்களுக்கு நன்றி :
http://kamadenu.blogspot.in/2013_12_01_archive.html