கிரேசி மோகன்

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

கண்னன் திருப்புகழ்(வெண்பா)….
——————————————————–
’’கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————blogger-image-1193904887
தடையற்ற ராதை, இடைபற்றி வாழும்,
இடவத்துப் பாதிமுகில் வண்ணா, -இடையினத்தா,
அள்ளக் குறையாத, தெள்ளுதமிழ் வெண்பாக்கள்,
வெள்ளமாய்ப் பாய்ந்தோட வா….(174)

தயிர்வெண்ணை உண்டு ,தளதள வென்று,
மயிற்பீலி சூடிநிற்கும் மன்னா, -வெயிற்கால,
தாகமாய் தொண்டையில், சோகம் அடைக்குது,
மோகமா! மோட்சமா! சொல்!….(175)

 
திகட்டும் அளவு, திரவியம் தந்தாய்,
புகட்டிய நஞ்சை புசித்தாய், -நகத்தால்,
உரித்தெறிந்த உற்சாகம், இன்றெங்கு போயிற்று
தரித்திர நாராயணா வா….(176)

 
தீக்குள் தகிப்பாய், துளிநீரில் தாகிப்பாய்,
காய்க்குள் கனிவாய் கொடியமனப், -பேய்க்குள்,
முனியாய் இருப்பாய், முகுந்தா எனக்கு,
தனியாய் தரிசனம் தா….(177)

 
திருப்பாற்க் கடலில், திருவனந்தப் பாய்மேல்,
விருப்பாய்க் கிடப்பாய் வெகுண்டால், -உரத்தால்,
இரணியனைக் கொல்ல, இரும்பைப் பிளந்து,
நரசிங்கம் ஆவோய் நம….(178)

 
தொட்டால் சுடுவான், தொடாமல் இருந்தாலும்,
கொட்டோகொட் டென்று குளிர்விப்பான், -விட்டலன்,
சுட்டபழம் ஏற்பான் சுடாத பழங்களை,
பட்டறையில் வைப்பான் புதைத்து….(179)

—————————————————————————————————————-

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *