கிரேசி மோகன்

Bhagavatha --Ulukala bandhanam - Keshav
Bhagavatha –Ulukala bandhanam – Keshav

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————
’’கண்ணன் வெண்பாக்கள்’’
————————————————–
மீண்டும் உரலிழுத்து ,மாமருதம் சாய்த்தரவத்,
தாண்டவம் ஆடித் தயிருண்டு, -வேண்டிய,
ராதையை காதலித்து, போதனையாய் கீதையை,
யாதவா வந்திங்(கு) எழுது….(204)

பாற்கடலை இன்றுவிலை, பேரமாய்ப் பேசினால்,
வேர்கடலை கூட வராதுகேள், -யார்கடவுள்,
உண்டுமிழ்ந்த நீயா ? உமிழ்ந்ததை உண்ணமீண்டும்
பண்டமாற்று வோனா பகர்….(205)

பள்ளிதனைக் கொண்டதால் பிள்ளை பெறுவதால்
வள்ளலென பாற்கடல் உள்ளமால், -புள்ளேறும்,
கார்மேக வண்ணனும், ஓர்மகன் அன்னையும்,
நேர்நிகர் ஆவார் நமக்கு….(206)

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

 

பார்த்த சாரதி பெருமாள் கோயிலில்
———————————————————–

மீசைக்கு பாரதி, ஆசைக்கு ருக்மணி,
ஓசைக்கு வெண்சங்கின் ஓங்காரம், -பூசைக்கு
ஆழ்வார்கள் பாசுரம்,அல்லிக் குளக்கரையில்
வாழ்வோனை நெஞ்சே வணங்கு….(207)

பாலுக்கும் காவலாய், பூனைக்கும் தோழனாய்அப்,
பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும், -மாலே,
பழகிடப் பூனையே, பாய்ந்தால் புலியே,
அழகிய சிங்கா அருள்….(208)

ஆராரோ என்றாய்ச்சி, சீராட்டித் தன்முலைப்பால்,
சோறாலே எவ்வாறு சொக்கவைத்தாள் ! -பாரேழை,
உண்டு பசியாறி, ஊழியில் ஆலிலையில்,
பண்டு படுத்தோய் பகர்….(209)
————————————————————————————————————–

 

படங்களுக்கு நன்றி:

http://bhagavatham.blogspot.in/

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *