திருமால் திருப்புகழ் (138)
கிரேசி மோகன்

—————————————————————————————————-
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)
—————————————————–
’’கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————–
மயிலை ஸ்ரீனிவாசப் பெருமாள் வீட்டு வாசலில்
விடி காலை எழுந்தருளிய போது….
—————————————————————————————-
சுற்றிடும் ஆழியை, சூழ்கடல்வெண் ஆழியைப்,
பற்றி, எதிர்புறம் பத்தினிகள், -நிற்றிருக்க,
புள்ளனெழாப் போதினிலே, பல்லக்கில் ஊர்வலமாய்,
கள்ளனென வந்தவரே காப்பு….(345)
ஆதி அரங்கனே, அன்று கயலாகி,
வேதங்கள் காத்த விமலனே, -மாதவனே,
ஆழ்வார் தமிழ்பெற்று, ஆயிரத்தில் ஒன்றாகி,
வாழ்நாள் கழிக்கும் வரம்….(346)

ஆடிப் பெருக்காகக், கூடிக் குளிக்குமாயர்,
பாடி இளம்கோ பியர்கூறை, -வேடிக்கை,
ஆகப் பறித்தவா, மோகத் திரைவிலக்கி,
யோகநிர்வா ணம்தா எனக்கு….(347)
ஆயர்தம் சேயனாய், ஆசையோ(டு) ஆய்ந்திட,
ஆயிரம் பேருண்டு, ஆயினும், -மாயிருள்,
சாயலான் கட்டுண்டு, சாதுவாய் நிற்பது,
தாயுரை தாமோ தரன்….(348)
அரியா தவனை, அறியா தவரே,
அறிய முயல்வார் அறிவால், -பரிவாக,
பூபழம் பத்ரம், படைப்போர், அகத்தடுப்பில்,
தீப்பிழம்பாய்த் தேங்கும் தவம்….(349)
அரியா தவனை, அறியா தவரே,
அறிய முயல்வார் அறிவால், -எரியா(து),
ஒளிந்த நெருப்பாய், உணர ,மரத்தினைப்,
பிளந்த குருடனைப் போல்….(350)
———————————————————————————————————
படங்களுக்கு நன்றி:—-
http://bhagavatham.blogspot.in/