திருமால் திருப்புகழ் (140)
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————–
’’கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————–
இன்று குருபூர்ணிமா-வந்தே கிருஷ்ணம் ஜகத்குரும்….
———————————————————————————————-
குருபூர்ணிமா வேண்டுதல் வெண்பா….
————————————————

“சீதாப் பழம்தின்ற ஸ்ரீராமச் சந்திரா,
கீதா உபதேச காகண்ணா, -போதாம்,
குருபூர் ணிமையில், இருகார் முகில்காள்,
தருவீர் எனக்குத் தவம்”….கிரேசி மோகன்….
——————————————————————–
தங்கத்தில் திருவனந்தன் கோலத்தை கணினியில் கண்டு….
————————————————————————-
அங்கம் ஜொலிக்க, அயனரன் பாதுகாப்பில்,
தங்கமாய்த் தூங்கும் திருவனந்த, -சிங்கமே!,
பாற்கடல் விட்டெதற்கு, பாதாளப் பள்ளிகொண்டீர்,
வேர்க்கலையோ அங்குமக்கு விஷ்ணு….(357)
பணம்தனில் தூங்கும், அனந்தனின் பூத,
கணங்களின் காவலுற்ற காசை, -நினைந்திடும்,
வேதாளங்கள் கையில், விலங்கிட வைத்திடும்,
பாதாளம் பாய்ந்த பணம்….(358)
THREE TIER PROTECTION FOR திருவனந்த புர ஸ்வாமிக்கு….
————————————————————————————

–
பாஞ்சாலி, ஆனை, பிரகலாதன், துன்பத்தில்,
பூஞ்சோலை இன்பமாய் பூத்தவா, -ஏஞ்சாமி !,
காப்புக் கடவுள்நீ, கேரளத்தில் முப்பாது
காப்பில் கிடக்கலாமோ கூறு….(359)
பணமுனக்கு வந்ததால், பத்தும்(அவதாரம்) மறந்து,
பணஅரவப் பள்ளிகொண்டாய் பத்து !, -மனமிறங்கு,
பாதாளப் பொக்கிஷம், போகட்டும் எக்கேடு
தீதாளும் தேசத்தைத் தாங்கு….(360)
போர்பாண்ட வர்க்காய், புரிந்தன்று பாரதப்,
பார்மூண்ட பாரத்தைப் போக்கியவா, -மார்தாண்ட,
வர்மனிடம் பொக்கிஷத்தின், நிர்வகிப்பை விட்டுச்செல்
தர்மசம் ரக்ஷணத் திற்கு….(361)
அடையார் அனந்த பத்பனாப ஸ்வாமி கோயிலில் எழுதியது
—————————————————————————

கடலேழில் தூங்கி, களைப்புற்றாய் போலும்,
அடையாற்றில் பள்ளி அடைந்தோய், -மடல்வாழை,
தென்னை மரம்சூழ், திருவனந்தா, ஐம்புலக்,
கண்ணைப் பறித்தெனைக் காண்….(362)
ஆடிவரும் பூரம், அவதரித்து, மார்கழியில்,
பாடிவரும் ஆண்டாளின் பாசுரத்தை, -நாடிவரும்,
வைகுண்டம் விட்டந்த, வில்லிபுதூர் வாழ்வுக்கு,
பைகொண்ட பாம்பணைவோன் பார்….(363)
———————————————————————————————————————
படங்களுக்கு நன்றி:
http://kamadenu.blogspot.in/2014_05_01_archive.html