கிரேசி மோகன்

Trivikrama. Thiruvona Aashamsagal.
Trivikrama. Thiruvona Aashamsagal.

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————-
’’கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————–
ஓணத்தின் போது எழுதியது….
————————————————

 

Vamana. Happy Onam.
Vamana. Happy Onam.

 

Krishna vanquishes Kuvalayapeedam. Chinese brush, watercolour.
Krishna vanquishes Kuvalayapeedam. Chinese brush, watercolour.

பொன்னாழி வெண்மைப், புரிசங்கு கையிருக்க,
கண்ணா யிரச்சேடன் கட்டிலில், -பெண்ணாழி,
மார்பில் பதித்து, மலரும்கண் மாலவனின்
சார்பாக கண்ணன் ஜனிப்பு….(364)

சேணம் பிடித்தைவர், சேனை ஜெயித்திட,
வானத்து வைகுண்டம் விட்டகன்ற, -ஓணத்தன்,
வாத புரீசன், வடமதுரா மன்னவன்,
கீதகோ விந்தந்தாள் காப்பு….(365)

களித்தெமுனா, தீரத்தில், கோபியர் சூழ,
குளித்தவர் காமத்தைக் கொன்று, -அளித்தனன்,
ஞானத்தை; அந்தநந்த, நீலத்தை நாம்வணங்கி,
ஓணத்தில் கொள்வோம் உவப்பு….(366)

வானத்தை, மண்ணை, வரமாய் பலிதந்த,
தானத்தை அன்றளந்த தெய்வத்தை, -ஓணத்து,
வாமனக் குட்டனை, வாத புரீசனை,
நீமனக் கட்டில் நிறுத்து….(367)

ஆச்சு அறுபது, ஆண்டு களுருண்டு,
போச்சாழி வண்ணா பரந்தாமா, -தாச்சு,
உறங்கி எழுந்துண்டு, ஊர்கதை பேசும்,
குரங்கிதை மாருதியாய்க் கொள்….(368)

எழுத்தில் பிழையிருந்தும், ஏற்றுக்கொள் கண்ணா,
வழுத்த வழியறியேன் வேறு, -பழுத்த,
கவியாக்கு என்னை, குறையொன்றும் இல்லா,
புவிவாழ்வை கோவிந்தா போடு….(369)

—————————————————————————————————————–

படங்களுக்கு நன்றி

http://kamadenu.blogspot.in/2013_09_01_archive.html

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.