இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?

1

கவிஞர் காவிரிமைந்தன்.

 

manju4
ஆடையிதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்..
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்..

அலைகடலைக் கண்டு ஆடாத மனமும் உண்டோ? அட.. நேற்று வந்த அலைதானே என்று நெஞ்சம் தள்ளிவிடுவதில்லை.  புதிய அலைகளாய் ஒவ்வொரு முறையும் கரையைத் தழுவும் அழகில் நாம் அல்லவா கொள்ளையடிக்கப்படுகிறோம்!

அதேபோல்தான் – காதல் – அன்று ஆதாம் ஏவாளில் தொடங்கி இன்றும் அதே ஆசை வெள்ளத்துடன் உள்ளத்துள் அலைமோதும் அற்புதம் நடந்தேறிக் கொண்டேயிருக்கிறது!

இந்தக் காதலைக் கவிஞர்கள் கால காலமாகப் பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பாடுவார்கள்.. பாடினார்கள்..   நேற்றையக் கவிஞன் பார்த்த பார்வையைப் படித்துவிடும் வாய்ப்பைப் பெற்ற இன்றைய கவிஞன் சிந்தனையும் வளமும் இன்னும் விசாலப்படுவது இயற்கையே..

சங்க இலக்கியங்களில் சொல்லப்படாத காதலா?  தமிழர்தம் வாழ்க்கையை அகத்துறை, புறத்துறை எனப் பாங்கறிந்து வகைப்படுத்தி, வருகின்ற தலைமுறைகள் அறியும் வண்ணம், செய்யுளுக்குள் செய்திகளைச் செதுக்கித்தான் போனார்கள்.  அனேகமாக, அப்படிச் செய்யுள் வடிவம் பெற்றப் பாடல்களுக்கு உரையாசிரியர்கள் தருகின்ற உரை வடிவில்தான் பெரும்பாலும் பொருள் உணரப்படும்.

என்னைச் சந்தித்து உரையாடிய பலருள் இவரும் ஒருவர்.  கிண்டி பார்த்தசாரதி என்கிற  அந்தநண்பர் தந்த இந்த இனிய செய்தி – அதுவும் இந்தப் பாடலைப் பற்றி.. அரிய தகவல்களைத் தந்ததை நன்றியுடன் வழிமொழிகிறேன்!  கவிஞரின் பாடல் வரிகளில் சங்கத் தமிழ்ப்பாடலொன்று – வரியொன்றோடு வழங்கப்பட்டதை அருமையாக விவரித்தார்.  விழிவிரிந்து நின்றேன்!  பல முறை இப்பாடலைக் கேட்டதுண்டு!  செய்யுள் வரியொன்றை – திரைப்பாடல்வரியாக மாற்ற முடியும் என்றே செய்து காட்டிய முத்திரைக் கவிஞரே முத்தையா என்னும் கண்ணதாசன்!

முதலில் சங்கத்தமிழ்ப்பாடல் என்ன சொல்கிறது (கலிங்கத்துப் பரணி – புலவர் ஜெயம்கொண்டார்) என்று பாருங்கள்.. அகத்துறைதான்..

மாட மாளிகை!  கூட கோபுரம்!
அரண்மணை வாசல்! அந்தப்புரம்!!
அழகிய சோலைகள்!  ஆங்காங்கே வண்ணமயில்கள்!
பழகிய தோழியாய் விண்ணிலே வெண்ணிலா!!
எழிலினில் வடித்த சிற்பம் என்றிடும் ஏந்திழையாள்!
அவள் மனம் கவர்ந்த கள்வனாய் ராஜகுமாரன்!
கண்ணிலே தெறிக்கும் வில்லைக் கண்களால் வாங்கியங்கே
காதல்போர் நடத்துகின்றார் காமன்வந்த வேளையிலே
போதும் போதும் என்று சொல்ல யாருக்கும் தோன்றவில்லை!
காலநேரம் கடந்தபோதும் கூடலிலே தோல்வியில்லை!
நள்ளிரவு வேளை..நான்கு குணங்களும் நலிந்துபோன
ஆரணங்கு அரைகுறையாய் கண்விழிக்கிறாள்.. – தழுவிக்
கிடந்த  தலைவன் கைகளைச் சற்றேயெடுத்து – ஆடையினைச்
சரிசெய்து கொள்ளும் முயற்சியில் அழகுமயில் ஈடுபடுகிறாள்!

(அட.. எல்லோரும் ஒருமுறை கைதட்டுங்கள்) கவிஞரின் கற்பனைக்கு பாராட்டுத் தெரிவியுங்கள்!

நிலவின் வெளிச்சம் கீற்றாய் அந்த உப்பரிகையில் விழ..
அதுதான் ஆடையென அதை இழுக்கிறாள் தலைவி..

எங்கள் தங்கராஜாவில் இடம்பெற்ற காதல் பாடலில் இந்தச் சங்கதியை அப்படியே இறக்குமதி செய்கிறார் கண்ணதாசன்!

ஆடையிதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்..
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்..

எங்கள் அறிவுக்கு எட்டியவரைதானே எங்களால்
உன் தமிழ்க்கடலில் முத்தெடுக்க முடிகிறது முத்தையா!!
ஆம்!  உன் ஒவ்வொரு பாடலும் தமிழ் முத்தையா!!

http://www.youtube.com/watch?v=BU-D2Vi2d2M
காணொளி: http://www.youtube.com/watch?v=BU-D2Vi2d2M

படம்: எங்கள் தங்கராஜா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்
………………………………………………………………………………..

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கு உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கு உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

பாதிக்கண்களை மூடித் திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதித் தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம் ஆ..
பாதிக்கண்களை மூடித் திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதித் தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம்

பாதிப் பாதியாய் இருவரும் மாறி
பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
காலை என்பது துன்பம் இனிமேல்
மாலை ஒன்றுதான் இன்பம்
காலை என்பது துன்பம் இனிமேல்
மாலை ஒன்றுதான் இன்பம்

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கு உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்

இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை ஆ..
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம் ஆ..
ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்

காலை நேரத்தில் காயங்கள் பார்த்து
களிப்பதென்பது கவிதையின் விளக்கம்
கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப் போவது மஞ்சம்
கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப் போவது மஞ்சம்

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கு உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

லால லாலலா லாலா லாலா
லால லாலலா லாலா
லால லாலலா லாலா லாலா
லால லாலலா லாலா

manju3manju2manju1

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.