மலரே குறிஞ்சி மலரே…
— கவிஞர் காவிரிமைந்தன்.
அழகிய பூக்கள் இயற்கையின் எழிலை தினம்தோறும் கொட்டித் தீர்க்கின்றன! மலையில் பிறக்கும் மலரிது! அதுவும் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் மலர் எனும்போது அதன் மகத்துவம் கூடுகிறது! தொடங்கிடும் பல்லவியே இந்த மலரை ஏந்திவருகிறது! பாடல் பிறக்கிறது!
கவிஞர் வாலியின் கரங்களிலே.. மெல்லிசை மன்னரின் இன்னிசையோடு மலையோரம் வீசுகின்ற மந்தகாசக் காற்றுபோல நம்மைநோக்கி நடைபோடும் தென்றலிது! மலரைப் பெண்ணுக்கு உவமையாக்கிவிடும் கவிஞர்களின் வரிசையில் வாலியின் கரம்பட்டு இந்தக் குறிஞ்சிமலர் பூக்கிறது!
குடகுமலையில் பிறக்கும் காவிரியின் கருவறையில் தொடங்கி குளிர்த் தென்றல் தாலாட்டும் மலையோரம் தழுவி எதிரொலிக்கும் இப்பாடல் எத்தனை இனிமையானது! பெண்மையின் மேன்மையை தன்னுடைய வார்த்தைச் சரங்களால் பின்னி மாலை தொடுக்கிறார் பாருங்கள் கவிஞர் வாலி!
பத்மஸ்ரீ கே.ஜே.யேசுதாஸ் குரலுடன் எஸ்.ஜானகி இணைந்து பாடும் இனிய பாடல்! இதைக் கேட்பது இன்பம்! மீண்டும் கேட்பது பேரின்பம்! டாக்டர் சிவா என்னும் திரைப்படத்தில் ‘நடிகர் திலகத்துடன்’ மஞ்சுளா இணைந்தளித்த காதல் பாடலிது! நயமிக்க வரிகளால் நங்கையைப் பாராட்டி, நல்லதோர் வீணைபோல் விரல்களால் அதனை மீட்டி, உள்ளம்தொடும் பாடலொன்று தந்துள்ளார்கள் .. காவியக் கவிஞருடன் மெல்லிசை மன்னருமே!..
காணொளி: http://youtu.be/4YCm11DX3wg
படம்: டாக்டர் சிவா (1975)
பாடல்: வாலி
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
குரல்: கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி
…………………………………………………………………………….மலரே குறிஞ்சி மலரே
மலரே குறிஞ்சி மலரே
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்ததை(மலரே)
யார் மடி சுமந்து தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து தலைவனை சேரும்
பெண்ணென்னும் பிறப்பள்ளவோகொடியரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனை சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ(தலைவன்)
நாயகன் நிழலே நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவதுதனே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்(தலைவன்)
பாடிடும் காற்றே பறவையின் இனமே
பணி மாலை தொடரே பாய்ந்திடும் நதியே
ஓடோடி வருங்களேன்பால் மனம் ஒன்று பூ மனம் ஒன்று
காதலில் இன்று கலந்து கண்டு
நல்வாழ்த்து கூறுங்களேன்(தலைவன்)