கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கேசவ் அபாரம்….யானைப் பசிக்கு சோளப்பொரி போல உனது கண்ணன் பசிக்கு இது கவளம்….ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமே….. சூப்பர்…. கிரேசி மோகன்….
KRISHNA FOR TODAY….
———————————–
‘’கவலையால் பீடித்த கம்சனின் ஆனை,
குவலயா பீடத்தின் கொம்பை, – திவலையாய்
ஒசித்த கண்ணனின் ஓவியம், கேசவ்தன்,
பசித்தசிந் தைக்கு பொரி’’….கிரேசி மோகன்….