கவிஞர் காவிரி மைந்தன்

kaviriபுதுக்கவிதை மூலம் பலரையும் கவிதை எழுதவைத்தவர் மு.மேத்தா. தனது கண்ணீர் பூக்கள் படைப்பின் மூலம் இளைஞர்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்த கவிஞர். கவியரங்கங்கள் பலவற்றின் தலைமை இவருக்கு சொந்தம்! முத்தான கருத்துக்களால் முன்னிலையில் இருப்பவர்! இவரின் திரையுலகப் பிரவேசம் சிற்சிலப் பாடல்களில் மட்டுமிருந்தாலும் சிறப்புக்குப் பஞ்சமில்லை! கற்பனைகளை மட்டும் தொட்டுக் கொண்டிருக்காமல், எதார்த்தங்களை எடுத்தாள்வது இவரின் கலை!

கவிதாலயா நிறுவனத்தின் சார்பில் கே.பாலச்சந்தர் தயாரிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் மு.மேத்தா வழங்கியிருக்கிறார் என்பது இனிப்பான செய்தியாகும்! இதே போல்.. கவிவேந்தர் இளந்தேவன் அவர்களைப் பயன்படுத்தி கல்கி திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதவைத்தவர் பாலச்சந்தர் ஆகும் என்கிற செய்தியையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

வேலைக்காரன் திரைப்படத்தில்.. இடம்பெற்ற பாடல்களில்.. வேலைக்காரன் என்கிற தலைப்பையொட்டி அமைந்த பாடல் வரிகளும் சரி.. தோட்டத்திலே பாத்தி கட்டி.. என்று தொடங்கும் பாடலில் சென்னையைப் பற்றிய குறிப்புகளும் சரி.. இதோ இங்கே நாம் காணவிருக்கிற காதல் பாடலான.. வா..வா.. கண்ணா.. வா.. என்கிற பாடலும் சரி.. அங்கங்கே திரைப்படப்பாடலாசிரியர் என்கிற தளத்திலும் கவிஞர் என்கிற படைப்பாளர் தன் முகம் காட்டியிருப்பதை நாம் காணமுடிகிறது.

kaaviri

சோத்துக்குள்ளே பாத்தியை கட்டுற பட்டணம் பட்டணமே.
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டிடும் கெட்டிடுமே

கட்சிகளும் வாங்கி இங்கே கட்டிடங்கள் வச்சிருக்கு
கஷ்டப்படும் ஏழைக்கெல்லாம் கட்டாந்தரை தானிருக்கு
கல்யாண மண்டபங்கள் கட்டிவச்சு காத்திருக்கு
கைகளிலே காசு இல்லை கன்னிப்பொண்ணு மூத்திருக்கு
இன்னமும் கதையை சொல்லட்டுமா
குப்பையை கூடையில் அள்ளட்டுமா

காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான்
கம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான்
ஷாஜஹானை பார்த்ததில்லை நானும் உன்னை பார்க்கிறேன்
தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன்
தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்
மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்

கிடைக்கிற சிறு சந்தர்ப்பத்தையும் தன் கருத்துக்களைச் செதுக்கி வைக்கத் தெரிந்த வித்தகராய் தெரிகிறார் கவிஞர். மு.மேத்தா. இசைஞானி இளையராஜா அவர்களின் இன்னிசையும் இதற்கு ஏற்ற களமாய் அமைந்திட மேத்தாவின் கொடி பறக்கிறது.. வேலைக்காரன் படம் முழுவதும்!!

படம் : வேலைக்காரன்
பாடல் : வா வா வா கண்ணா
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: மு.மேத்தா
பாடியவர்கள் : சித்ரா, மனோ

வா வா வா கண்ணா வா
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான் தனிமையில்
உனக்கொரு சிறுகதை நான்
தொடத் தொட தொடர்கதை தான்
உருகி உருகி இதைப் படித்திட
வா வா வா வா கண்ணா வா
வா வா வா

வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழு வண்ணமோ
தோகை உந்தன் தேகம் சூட மேகமாலை பின்னுமோ
காணும் இந்த பூக்கள் மேலே காயம் என்ன காயமோ
காற்சலங்கையோடு வண்டு பாடிச் சென்ற மாயமோ
நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகை
வாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை
நாலு கண்கள் பாதை போட
நாகரீகம் தொடர்ந்தது

வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
எனக்கொரு சிறுகதை நீ இனிமையில்
தொடத் தொட தொடர்கதை நீ தனிமையில்
எனக்கொரு சிறுகதை நீ
தொடத் தொட தொடர்கதை நீ
உருகி உருகி உனைப் படித்திட
வா வா வா அன்பே வா
வா வா வா

ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே
ஆவலாக வந்த பின்னும் தஞ்சம் இந்த நெஞ்சமே
ஆசை கொண்ட தேகம் ரெண்டு நீதி மன்றம் போகுமே
பேசத் தேவை இல்லை என்றே அங்கு தீர்ப்பு ஆகுமே
ராக வீணை போலவே நானும் வந்து போகவோ
தேகம் வீணை ஆகவே தேவ கீதம் பாடவோ
நானும் நீயும் காதல் கைதி
எண்ண எண்ண இனிக்குது

வா வா வா அன்பே வா
தா தா தா அமுதம் தா

காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான்
கம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான்
ஷாஜஹானை பார்த்ததில்லை நானும் உன்னை பார்க்கிறேன்
தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன்
தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்
மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்
பாதி நீயும் பாதி நானும்
ஜோதியாக இணைந்திட

வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
எனக்கொரு சிறுகதை நீ இனிமையில்
தொடத் தொட தொடர்கதை நீ தனிமையில்
எனக்கொரு சிறுகதை நீ..ஆ..
தொடத் தொட தொடர்கதை நீ..
உருகி உருகி உனைப் படித்திட
வா வா வா அன்பே வா
வா வா வா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *