–கவிஞர் காவிரிமைந்தன்

கண்ணன் மனநிலை2

மகாகவி பாரதியாரின் பாடல்களை அவற்றில் மனம்கொடுத்தோர் அவ்வப்போது திரைப்படங்களிலும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். இசைமேதை ஜி.இராமனாதன் இசையமைப்பில் தெய்வத்தின் தெய்வம் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் எஸ். ஜானகி குரலில் இழைந்துவரும் அமுதகானமாக..

எஸ்.எஸ்.இராஜேந்திரன் .. விஜயகுமாரி நடிப்பில் இயக்குனர்திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வண்ணக்கவிதைக்கு ஒரு வசந்தவிழா எடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

ஒப்பிலாப் பாடலுக்கு உகந்த இசை பின்னணியாய் அமைந்துவிட அதை உணர்ந்து பாடி உருவம் தந்திருக்கிறார் பாடகி!

நற்றமிழ் நர்த்தனம் – நலம் சேர்க்கும் மெல்லிசை மோகனம் கேட்கும்போதே பரவசம் தருகிற பாடல்! மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிற இசைவெள்ளம் பாய்கிறது – இதயத்தைத் திறந்துவையுங்கள்!

 

http://youtu.be/j8y_bhR19oI

காணொளி: http://youtu.be/j8y_bhR19oI

படம்: தெய்வத்தின் தெய்வம்
பாடல்: பாரதியார்
இசை : ஜி. ராமநாதன்
குரல்: எஸ் ஜானகி

பாரதிஜி ராமநாதன்ஜானகிதெய்வத்தின் தெய்வம்
கண்ணன்…
கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்;
எண்ணமுரைத்துவிடில் தங்கமே தங்கம்..ஆஆ…
எண்ணமுரைத்துவிடில் தங்கமே தங்கம்
பின்னர் ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்!

(கண்ணன்…)

ஆற்றங் கரை அதனில் முன்னம் ஒருநாள்…
ஆற்றங் கரை அதனில் முன்னம் ஒருநாள்
எனை அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவேனென்று
சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்..!

(கண்ணன்…)

நேர முழுதிலும் அப்பாவி தன்னையே…
நேர முழுதிலும் அப்பாவி தன்னையே
உள்ளம்நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்..!
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்….
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால் பின்பு
தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்..!

(கண்ணன்..)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *