மகன் தினம்!

-கனவு திறவோன்

அடிக்கடி வருகிறார்கள்
டாக்டரும்
வக்கீலும்
மத்தியஸ்தரும்
அக்காக் குருவியும்
மழையும்
வெயிலும்
காற்றும்
காப்பகத்தில் இருக்கும்
அம்மாவைப் பார்க்க!

மாதத்திற்கு ஒருமுறை
மணியார்டர் தரும்
தபால்காரரும்
வருகிறார்
கடைசி வரை
மகன் மட்டும் வரவில்லை!

*******

அம்மா உயிரோடு இருக்கும் போது
ஆதரவற்றோர் விடுதியிலும்
செத்தபிறகு
கங்கைக் கரையிலும்
அன்னையர் தினம்
அனுசரிக்கும் மகன்!

**************

ஆ சிரமத்தில்
இருந்த தாயைப்
பார்க்கத் தனயன் வந்தான்
கைகளைப் பிடித்துக் கன்னத்தில் ஒற்றியவள்
கண்களிலிருந்து வழிந்த நீர்
ப்ரைலி மொழியில் எழுதியது…
‘மகன் தினம்’ என்று ஒன்றிருந்தால்
அன்றாவது ஒரு நாள்
உன்னைப் பார்க்க
உன் வீட்டிற்கு வரலாமே?!

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *