பசுவாகிய ஜீவாத்மா சத்திநிபாத விவேகத்தைக் கொண்டு , குரு கை காட்டியவாறு நீரும் நீர்க்குமிழியும் கலந்து ஒன்றானாற் போல, பதியினைச் சேர்ந்து ஐக்கிய பதம் பெற்ற பின் பசுவுடன் பாசம் நஷ்டமானபடியினாலே “பதி அணுகிற் பாசம் நில்லாவே” என்று “திருமூலர்” கூறுகிறார்….இங்கு பதி-கண்ணன், பசு-உயிர், பாசம்-தளை தட்டக் கூடாது அல்லது “ஈசனோடாயினும் ஆசை அறுமின்”….பசுவுக்கு உண்டான பதியின் பாத(ச)ம் பருகும் ஆசையைக் கூட விடவேண்டும் என்பதை கேசவ் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்….சூப்பர் கேசவ்….

crazy kesav

”பசு,பதி பாதம் பருக முடியாது,
அசுவ ரதஓட்டி ஆவின், -சிசுவாய்,
பதியவன் பாசம் பசுவுக்(கு) அளித்த,
சதியவன்லீ லாவோகே சவ் ” ….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *