-பா.ராஜசேகர்
இன்பமெல்லாம்
இன்பமில்லை
துன்பமில்லா
இன்பம் கண்டாரில்லை !
துன்பம் கண்டுத்
துயரம் கொண்டு
இன்பம் கண்டார்
தோற்பதில்லை !
தோல்விகள்
நிலையானதென
எண்ணிடாதே!
துன்பங்கள்
நிலை கொண்டால்
அஞ்சிடாதே !
சுற்றிவரும்
உலகைப்பார்
சோர்ந்திடாதே!
தோல்விகளைக்
காலடியில்
படியாக்கு
முயற்சியே
உன் முதலீடு !
நம்பிக்கைப்
படியேறு
வானம் தூரமில்லை !
வெற்றிகள்
விண்ணை முட்டும்
உலகமே
உன்தோளைத் தட்டும் !

Leave a Reply