கிரேசி மோகன்

 ”உன்னைப்பார்த்(து) இந்த உலகம் சிரிக்கட்டும்,
எண்ணைவார்த் துத்தீ எரிதல்போல், -முன்னை
சிரித்தீசன் முப்புரம் சாம்பலில் மூழ்த்த,
விரித்தனன் நெற்றி விழி”

 

சிரிங்க”சிலர்சிரிப்பார், வேறுசிலர் சிந்திப்பார், ஆனால்,
கலர்சிரிப்பே கண்ணுக்கு கூலிங், -மலர்சிரிப்
போடுசேர்ந்து சிந்திக்கும் புத்தி மணத்திடும்,
நாடு மணக்க நகை”
”தாய்சிரிக்கத் தானழுது சேய்பிறக்கு மாற்போல்நீ,
வாய்சிரிக்க, சிந்திக்க வைநெஞ்சே, -பாய்விரிக்கும்
மூப்பில் வருமே முனகல்தான், புன்னகைக்
காப்பில் இருக்கக் களிப்பு”

”கழுதையின் பாலைக் குடித்திடல் வேண்டாம்
அழுத மகன்வாய் அகண்டு, -பொழுதுபோக,(ராத்திரி)
கண்ணயர்ந்த வேளையில், காட்டிடுவார் கண்ணபிரான்
புன்னகைக்க உம்மாச்சி பூ”

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *