மகாத்மாவும், கல்வித் தந்தையும்!

0

  -சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

அஹிம்சையை ஆயுதமாய்க் கொண்ட அண்ணலே
ஆர்வமுடன் உமைஇன்று  நினைவு கூா்வோமே
இந்திய தேசத்தின் பிதா நீர் இல்லையெனில்
சுதந்திரக் காற்றை நாங்கள் சுவாசிக்க  இயலுமா?  gandiandkamaraj

உயரிய வழியில் தான் போராட்டம் பல நடத்தி
நாட்டின் மகாத்மாவாய் நாளும் பலர் மனதில் நீரே
கதராடை மகத்துவத்தை அனைவர்க்கும் உணர்த்தி
கண்கண்ட கடவுளாய்த் தூய மனதோடு நின்றீரே

பலர் மனதைப் பற்றிய தீண்டாமைப் பேய்தான்
பகலவனைக் கண்ட பனிபோல் விலகியது உம்மால்
நற்குணங்களின் நாயகன் நீர் பிறந்த நாளில் தான்
கல்விக் கண் தந்த காமராஜருமே விட்டுப்  பிரிந்தார்

தாய்மண்ணின் பெருமை தரணியெல்லாம் சிறக்கத்
தன்னலமற்ற நன்மகனார் அளித்த கல்வியே சாட்சி
கஷ்டங்கள் பல தாங்கித் திட்டங்கள் பல அர்ப்பணித்த
கர்ம வீரர், படிக்காத மேதை அவரையும்  பணிவோமே

நன்மக்கள் இருவரை இன்று  நினைக்கின்ற கடமையே
நாட்டு மக்கள் நம் அனைவரின்  தலையாயக் கடமையே
ஆட்சிகள் பல மாறிடலாம்,  காட்சிகள் பல மாறிடலாம்
ஆதவன் தம் புகழ் போல  உங்கள் புகழ்  நீடு வாழும்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.