நவராத்திரி நாயகியர் (7) சங்கரன் கோயில் – கோமதி அம்மன்

0

க. பாலசுப்பிரமணியன் 

 

ஆலகாலமுண்ட ஆதிசிவன் அன்பு நாடியேGod-1

ஆடித்தவமிருந்து அருள் செய்யும் அம்பிகையே!

ஊசி முனையில் ஒரு காலில் நீ நின்றாலும்

பாசமுடன் பாரெல்லாம் வாழ வைத்தாயே !!

 

புன்னைவனத்துப் புன்சிரிப்பே !

புவியீர்த்த விண்வெளியே!

அனைத்துயிர்க்கும் நீ ஆவுடையாள் !

அறமென்னும் அமுதூட்டும் தேன்மொழியாள் !

 

சங்கடங்கள் தீர்த்திடிடுமே சங்கரன்கோயில்

சர்ப்பங்கள் காத்திருக்கும்  புற்றுவாயில் !

ஊழ்வினையாய் ஓடிவந்த விடமெல்லாம்

ஓங்காரி கண்பட்டா லே நல்லமுதாகும் !

 

போகமுடை வாழ்வழித்துக்  காலமெல்லாம்gomathi

நாகத்துடன் வாழ்ந்திருந்த யோகினியே!

பற்றுடனே வேண்டியவர்  ரோகமெல்லாம்

புற்றுமண்ணால் போக்கிவிடும் கோமதியே !

 

சங்கரனும் நாரணனும் ஒன்றிடவே

சமத்துவத்தைக்  கற்பித்த  சாம்பவியே!

பதுமனுக்கும் சங்கனுக்கும் வழிகாட்டி

பாம்பாட்டி சித்தருக்கு அருள் தந்தாயே !

  

பாம்புடனே தேளையும் பரிசாக அளித்தாலும்

பாங்குடனே அவர் குறைகள் தீர்த்திடுவாய் !

மனம்கலங்கி வந்தோர் மாவிளக்கு ஏற்றிடவே

மாதேவி! ஒளிவிளக்காய் நின்றிடுவாய் !

 

கண்களிலே நீயிருந்தால் கவலைகள் நீங்கிவிடும்

எண்ணத்திலே நீயிருந்தால் ஏற்றங்கள் வந்துவிடும் !

ஒருராத்திரி போற்றிடவே  ஓலங்கள் அடங்கிவிடும்!

நவராத்திரி போற்றிகிறேன்! நாயகியே வந்துவிடு!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.