நெமிலி பாலா திரிபுர சுந்தரி (பாலா பத்துப் பாட்டு)

0

images

சகலகலா வல்லி அகலாதென் வாக்கில்
பகலிரவாய்க் கொள்வாய்நீ பள்ளி -புகலவரும்
வெண்பாவாம் வாரிசத்தில் வந்தமர்ந்து நின்புகழை
பெண்பாலா பாடிப் பற ….(1)

மட்டொழுகும் வெண்கமலம் மீதில் தனிவெண்மைப்
பட்டிழைய சிற்றிடையில் போயமர்ந்து -மொட்டிதழால்
ஆய கலைகளை ஆன்றோர்(கு) அறிவிக்கும்
தாயே திரிபுரை தா ….(2)

அற்பனே ஆனாலும் ஆசான் திரிபுரையின்,
பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை
ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர்
மாற்றுத் துணியாய் மனது ….(4)

உளம்கொடுக்கும் உன்ன, உரம்கொடுக்கும் நண்ண
களம்கொடுத்து ஞானக் கொழுந்தாய் -புலன்மடக்கி
ஆசை அறுத்தான்ம பூசைக்கு பாலாஸ்ரீ
ஓசை சதங்கையொலி ஓம் ….(5)

பாக்கு பழமிலை பூக்கள் பணிவெதிர்
பார்ப்பாள் பராசக்தி பாலாஸ்ரீ -வாக்கில்
வினயமுடன் வித்தை விரும்புவோர் தம்மை
தனயனென ஏற்பாள்அத் தாய்….(6)

 
’’காசியில் கங்கையில், ஆசியில், ஆண்மையில்,
வாசி அடக்கும் விளையாட்டில், -பூசிடும்
மாசிவை வெண்ணீற்றில், ஹாசிய நாடகத்தில்
ஆ!சிரி அப்பா அவள்’’….(7)….கிரேசி மோகன்….

“குமிழ்விழும் கன்னம் குருநகைச் சின்னம்,
அமிழ்தொழுகும் எண்ணம், அரியாய் -உமிழ்ந்தனள்,
உண்டேழ் உலகத்தை, பண்டைநாள் ஊழியில்,
கொண்டாள் நெமிலிக் கரை”….கிரேசி மோகன்…. (8)….

 
“நாளாக நாளாக நான்செல்ல வேண்டுமே !,
வாளாய் இருப்பதேன் வாலையே ! -காளிநீ,
தேளாய்க் குடையுமெந்தன் தேகாபி மானத்தை,
வாளாய் இருந்து வகிர்”….கிரேசி மோகன்….(9)….

 

“சாகா வரம்பெற்று சாதிப்ப(து) என்னவோ !,
ஆகா நெமிலி அமர்ந்தபடி , -தேகாபி,
மானத்தை விட்டு மதியீனன் போல்பாலா,
பானத்தை நாளும் பருகு”….கிரேசி மோகன்….(10)….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *