கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் – தமிழை ஆண்டாள்
”பைகொண்ட பாம்பில் படுத்த பெருமாளை
மைகொண்ட கண்ணாள் மலர்சூடி, -மெய்கொண்ட
தைக்கண்ட தாமோ தரன்தாய்விட்(டு) ஓடிட,
தைகண்டாள் மார்கழித் தாய்”….கிரேசி மோகன்….
தைகண்டாள் -தை பிறந்தால் திருமண வழி பிறக்கும்….
மார்கழித் தாய் -ஆண்டாள்
“அழகாண்டாள் பாட்டு அழகாண்டாள் பக்தி
பழகாண்டாள் போல்நீயும் பண்பு, -கழுகாண்டான்,
கண்முன்னே தோன்றியுனைக் கல்யாணம் செய்திடுவான்
பெண்கள்நாம் புருஷோத் தமர்க்கு” ….கிரேசி மோகன்….
கொஞ்சும் அனையோடு கோவிந்தர் நாளெல்லாம்
கெஞ்சிக் குலவிக் கிடக்கின்றார் – அஞ்சுகமே!
பூவைத் திரட்டிப் பொழுதெல்லாம் காத்திருந்தாள்
பாவையென்ற வர்க்குப் பகிர்