ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 41

0

சி. ஜெயபாரதன்.

கலில் கிப்ரான்

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

“ஒருநாள் பொறுமை இழந்து நான் பல் மருத்துவரிடம் தொல்லை தரும் பல்லைப் பிடுங்கச் சொன்னேன். இரவில் என் நித்திரையைக் கெடுத்து என்னை அலர வைத்து வேதனை கொடுத்தது. குணப்படுத்தாது பல்லைப் பிடுங்குவது முட்டாள்தனம்,” என்று பல் மருத்துவர் பிடுங்க மறுத்தார். பிறகு பல்லருகே துளையிட்டுத் தோண்டி உள்ளே சுத்தம் செய்தார்.”
– கலில் கிப்ரான் (Decayed Teeth)
___________________

முதல் முத்தம்
___________________

அருமைக் காதலியின்
முதல் கண்ணோக்கு
நீர் வெள்ளத்தின் மேல்
மிதந்து
வானக மண்டலத் தையும்
வையகத் தையும்
புலர்ந்திட வைக்கும்
ஆன்மாவைப் போன்றது !
அப்போது
அகிலத் தலைவன்
ஆசிகள் கூறுவான் :
“அப்படியே நடக்கட்டும்”
என்று.
___________________

முதல் முத்த மானது
தேவதை நிரப்பிய
கிண்ணத்தில்
உதடுகள் தொட்டுச் சுவைக்கும்
முதல் வாழ்வுத் தேனமுது !
அதுவே
முத்திரைக் கோலம் !
ஐயத்துக்கும்
இதயத்தை வருத்தி
ஆன்மா மயக்கு தற்கும்
இடைக் கோடு !
இதய உட்சுனையை
பூரிப்பால்
பொங்க வைத்திடும்
ஓர் உறுதிப்பாடு !
___________________

அதுவே வாழ்க்கைக் கீதம்
உதித்தெழும் துவக்கம் !
பூரண மனிதன்
ஆரம்ப நாடகத்தின்
முதல் காட்சி !
அதுவே
கடந்த காலத்து வியப்பையும்
எதிர் காலத்து
ஒளி மயத்தையும்
இணைக்கும்
ஓர் ஐக்கிய பந்தம் !
ஊமை உணர்வையும்
ஒலிக்கும் பாட்டையும்
ஒன்றாக்கும்
ஓர் தொடர்ப்பாடு !
___________________

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *