–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“கடைவீதிப் பக்கம் நான் செல்லும் போது திருவாளர் பிதற்றுவாய் ஒவ்வொரு கடை வாசலிலும் நின்று போவோர் வருவோரைப் பற்றி வக்கணை அடிப்பார். பிதற்றுவாயன் அவரைப் பின்பற்றிச் செல்வதையும் நான் அவரது மௌன முகத்திலே கண்டிருக்கிறேன். பொது மக்களுக்கு ஆட்டிப் படைக்கும் அவன் இருக்கை தெரிவதில்லை.”
கலில் கிப்ரான். (Mister Gabber)
___________________
காரணம்
(Reasoning)
___________________
உன்னை நீயே
கண்காணித்துக் கொள்வாய்
ஓர் எதிரியாய்
உன்னைப் பாவித்து !
பிறரை நீ ஆள முடியாது !
உன் உணர்ச்சிகளை
முதலில்
நீ கட்டுப் படுத்த
முடியாது போனால் !
உனது மனச் சாட்சிக்கு நீ
அடிபணிவாய் !
___________________
உன்னத முனிவர் ஒருவரின்
பொன்மொழி இது :
“எந்தத் தீங்குக்கும்
இருக்குது மருந் தொன்று !
நாடும் மருந் தில்லை
மூடத் தனத் துக்கு !
பிடிவாத
மூடரை இகழ்ந்து
அவர்க்கு அறிவுரை புகட்டல்
நீர் மேல் எழுத்துக்கு
நேராகும் !
குருடனை,
முடக்கு வாதத்தை
குட்ட ரோகி யைக்,
குணப் படுத்தினார்
ஏசு நாதர் ! ஆயினும்
மூடனைக் குணமாக்க அவரால்
முடிய வில்லை !”
___________________
பிரச்சனை என்ன வென்று
அறிந்திட, விளைவை
நாற் புறமும் கூர்ந்து நோக்கு !
எங்குள்ளது தவறென்று
புரிந்து கொள்வாய் !
வீட்டு வாசல்
விரிந்துள்ள போது
திறக்கும் கதவு
சிறுத்தி ருக்க லாமா ?
வாய்ப்பு வாசல் கதவை
வந்து தட்டினால்
பாய்ந்து பிடித்துக் கொள் !
தேடி வரும் போது நீ
ஓடி வரவேற்பாய் !
___________________
தீங்கை நுழைப்பது மனிதன் !
இறைவன் இல்லை !
அறிவையும்
அடிப்படைக் காரணத் தையும்
அளிப்பது நமக்கு
அதிபன்
தவறையும் அழிவையும்
தடுப்ப தற்கு !
கடவுளின் ஆசிகள் உண்டு
காரணம் என்னும்
மானிடக் கொடைக்கு !
___________________


Leave a Reply