”சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பண மத்து’’….

கன்று மடியிடைக் கண்ணம்மா….
————————————————————–

c45631c4-0a1d-4e3b-aa8b-91dad8ce9453

’’மடிப்பிச்சை ஏற்றுகோ மாதாவின் பாலை,
உடுப்பி கிருஷ்ணன், உலகப், -பிடிப்பகல,
கீதாவை மத்தால் ,கடைந்து வினியோகம்:
மாதாவாய் கண்ணன்ந மக்கு’’….

 

”நீலம்பா ரித்த நவநீதன் கைகளில்,
பாலின்ப வெண்ணை பிசுபிசுக்க, -காலின்பம்
கொண்டு பருகுகிறாள் கோமாதா;, கோலமிதை
விண்டுரைத்த கேசவ் வியப்பு’’….

 
“மத்திலோர் கையும்ச மத்தாய் மறுகையும்
உத்தமன் வைத்தூர் உடுப்பியில், -கத்துங்,
கடற்பால் நவநீதம் கக்கக், கடைய
அடப்பார் ரெடியாய் அவன்”….கிரேசி மோகன்….

“இடுப்பில் வலம்வைத்(து) இடக்கை உயர்த்தி
உடுப்பிவிலாஸ் கண்ணன் உரத்து- விடுக்கின்றான்,
“இன்றை யMENU, இடிமின்னல் தாங்கியாய்,
என்றும்நீ உச்சிக்கே ஏங்கு”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *