”படமும் பாடலும்” – கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
“காத்திருத்தல்” தான்காதல்
முதல் எழுத்து “கா”
முடிவெழுத்து “தல்”
சேர்த்துப் படித்தால் ‘’காதல்’’
தலையெழுத்து ”கா”….
காலெழுத்து ”தல்”….
கால் வலிக்கக் காத்திருத்தல்
காதல் தலையெழுத்து ….கண்ணன்….
”படமும் பாடலும்”
————————————-
காலை வரப்போகும் கேசவ்தன் கண்ணனுக்காய்,
ஆலைக் கரும்பாய் அரேபியப் -பாலையில்
காத்திருக்காள் ராதைப்பெண்: , காத்திருத்தல் தான்காதல்
சூத்திரத்தை சொன்னான் சிரித்து ….கிரேசி மோகன்….