கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கேசவ்வின் இந்த ஓவியத்தைப் பார்த்தவுடன் என் நினைவுக்கு வந்தவர்
பகவான் ஸ்ரீ ரமணர்….கிருஷ்ணனும் ரமணன்தான்….
சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாச்ரம லேகுலு….
பகவானிடம் ஒரு குரங்கு தனக்குப் பிறந்த குட்டியைக்
காட்ட வந்த போது, ஒருவர் அதை விரட்ட பகவானின் பதில்….
‘’மந்திக்கு தன்குட்டி மாருதிதான்,ஆகையால்
வந்திருக்கு என்ஆசீர் வாதத்திற்(கு), -உன்தரப்பில்,
மாதவம் தோன்ற மறுநாளே காட்டலையா’’ :
பேத மிலாத பரிவு’’….கிரேசி மோகன்….
மாதவம் -அன்னாரின் சிசு….

