கிரேசி மோகன்
———————————————
தனதன தனான தனதன தனான
தனதன தனான-தனதான

“திரைகட லுளோடி திரவிய வியாச
மறைகொண ருமீன -பெருமாள்காண்
வரைவழு விடாது வலியமு துகாள
உருவில்க டலாமை -பெருமாள்காண்
சிறையவ னிமீள விரையும வதார
வடிவுரு வராக -பெருமாள்காண்
இரணிய விரோதம் ஒழி,பிர கலாத
அழையவ ருசீய -பெருமாள்காண்
வரமரு ளமாவ வலிமுடி யிலேறி
உலகள வுகாணு -பெருமாள் காண்
மழுபர சுராம,உழவுப லராம
பழகுகு கராம -பெருமாள்காண்
இறையென உலாவி பறவையே னவேடன்
இரையுறு முராரி -பெருமாள்காண்
தருமம துவாழ தரணிஅ வதார
தசமுக புராண -பெருமாளே”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *