உண்டாகி உண்டுமிழும் குண்டாகி, வேதக்கற்
கண்டாகி, வேதாந்த சிண்டாகி -தண்டாகி
செண்டாகி, முண்டகத்து வண்டாகி ஜீவான்மா
ரெண்டாகி வந்துபோகும் பண்டு….(37)

பண்டமாய் பாத்திரமாய் உண்டவனாய் ஜீரணிப்பாய்
பிண்டமாய் மோட்சமாய் பித்ருவாய் -எண்டிசையாய்
பூதமாய் புல்பூண்டாய் யாதுமாய் உள்ளதாய்
ஆதலே ஆன்மீக ஆய்வு….(38)

ஆய்ந்தரிய ஆன்மா அவரைக்காய் அல்லவே
மேய்ன்தழியும் ஐம்புல மாடுகளை -சாய்ந்திருந்து
வேடிக்கைப் பார்த்திடும் வேதாந்த பட்சியாம்
பாடிக்கை கோர்த்துப் பற….(39)

பறந்திடும் ஆவி ,பிறந்திறக்கும் மேனி
மறந்திடும் மாயமனக் கூனி -நிரந்தரம்
ஒன்றந்த ஆன்மனுடன் ஒன்றி இருத்தலே
கன்றிந்த ஜீவனுக்கு காப்பு….(40)….கிரேசி மோகன்….
————————————————————————————————————–

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *