கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

0

 

’’கண்ணன் அனுபூதி’’
—————————————-

2227ce2b-d571-42b3-bffb-1e347e11ad9a
நாக்கில் நரம்பின்றி நாளை நமதென்ற
போக்கில் தடம்புரண்டு போய்விழுவோம் -தூக்கில்
இடப்பட்டும் தூங்கும் மடப்பயலே அந்த
இடப்பயல் தாளே இருப்பு….(10)
இருப்பதிங்(கு) ஒன்றே இதன்பேர் கண்ணன்
மறுப்பதை விட்டென் மனமே -கருப்பொருளைப்
பார்க்காத போதும் பாடப் பரவசத்தில்
கார்கால மேகத்தில் காண்….(11)

காணவனைக் காற்றில் கலந்துவரும் கீதத்தில்
நானென(து) இல்லாத மோனத்தில் -தேனளவு
பார்க்கும் மலர்வண்டின் போக்கில் இனப்பெருக்கம்
கோர்க்கும் குயுக்தியின் கண்….(12)

கன்னங் கருத்தது காரிருள் போன்றது
நண்ணும் நமக்கொளி நாளது -முன்னம்
பிறக்காது பின்னர் இறக்காதாம் இன்னும்
திறவாசொர் கத்தாள் அது….(13)

அதனால் இதுவாய் இதனால் அதுவாய்
மதனால் மயங்கும் மனமே -முதலாம்
பதியாய் இருந்து பசுக்களை மேய்ப்போன்
கதியாய்க் கிடக்கக் களிப்பு….(14)

களிப்பில் திளைத்துக் களைத்துச் சலித்துப்
புளிக்கும் பழமாம்இப் பூமி -ஒளித்த
நிலத்தை வராகமாய் நெம்பிய ஆயர்
குலத்தோனின் கால்கண்கை கூப்பு….(15)….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.