‘’ஸ்ரீ பகவான் உவாச:….
——————————————-

9903ff81-e93f-4338-a0fa-48987b7c8dec

”ஆரத் தழுவி அருச்சுன காமத்தை(பேதத்தை-அதுவும் காமத்தில் சேர்த்தி)
வேரறுத்துச் சொன்னார் , விஜயரே! , -பாருச்சி,
தேருச் சியில்காக்கும் தேவன் அனுமனுள்ளான்,
நூறைச் சிதைக்க நிமிர்’’….
”நூறைநீ வென்றிட ஈரே(ழு) உலகாள்வாய்
மாரில் கணைதைத்து மாளுங்கால் -வீராநீ
சொர்கம் புகுவாய் சுதாரித்(து) எழுசேயே
தர்கம் புரிதல் தவிர்”….
”கொல்வோன் எனவும் கொலையுண் டோனெனவும்
சொல்வோர் இருவரும் மூடராம் -உள்ளான்மா
கொல்வதும் இல்லை கொலையுண் பவனுமில்லை
வெல்வதுன் வேள்விவிஜ யா”….கிரேசி மோகன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *