கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”வீட்டுக்குள் விஸ்வரூபம்’’
————————————————
‘’மதிய உதயம் கதிர்மதியம் போல்முகத்தான்’’(மாட்னி ஷோ….!அசோதைக்கு(யசோதை)….!
”அந்தரங்க ராஜன்தன் அன்னை அசோதையை
அந்தரங்க மாக அழைத்துப்போய், -தந்திரமாய்
வட்டக் கதிர்மதியோன் வாய்பிளந்து காட்டுகிறான்
விட்ட உறிக்கு வளர்ந்து’’(விஸ்வரூபம்)….கிரேசி மோகன்….
வளர்ப்பு அன்னைக்கு ஸ்பெஷலாய் வளர்ந்து காட்டுகிறான்,
அதேசமயம் கண்ணன் இதை சாக்காக வைத்து விட்டத்து உறி
தொங்கும் வெண்ணைய்க்கு வேட்டு வைக்கிறானோ மாயாவி….!

