கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
இன்று கேசவ் உபயத்தால் என் நினைவு மலர்ந்தது….1975ல் பொறியியல் கல்லூரியில் படிக்கையில் , விவேகானந்தாவில் படிக்கும் என் தம்பி ‘’மாது பாலாஜியின்’’ குழுவுக்கு சிறு சிறு நாடகங்கள் எழுதித் தருவேன்(SKITS)….அப்படி எழுதியதுதான் ‘’கச்சத் தீவு’’ SKIT(Political நாடகம்….சோ சாரைப் பார்த்து போட்டுக் கொண்ட சூடு….அன்றோடு பாலிடிக்ஸ் வசனங்களை விட்டுவிட்டேன்….)…. அதில் பஞ்ச பாண்டவர்களுக்கு சொந்தமான ‘’கச்சத் தீவைக்’’ கேட்க கிருஷ்ணர் துரியோதனாதியரிடம் தூது செல்கிறார்….அதில் ஒரு வசனம்….துரியோதனர்-கிருஷ்ணா எங்களுடன் விளையாடாதே நாங்கள் ‘’100 RIFLES”(அந்தக் கால சினிமா….) …..பதிலுக்கு கிருஷ்ணர் -’’உன்னோடு விளயாட நான் என்ன ‘’டென்னீஸ் கிருஷ்ணனா(இந்த வசனம் இன்றைய சாக்லேட் கிருஷ்ணாவிலும் உண்டு)….நீங்கள் நூறு பேரும் 100 RIFLES என்றால் பஞ்ச பாண்டவர்கள் ”5 MEN ARMY”(இதுவும் அந்தக் கால வெஸ்டேர்ன் மூவி….)….இண்டெர் காலேஜ் அதிரும்….மேலும் எங்கள் குழுவை(கிரேசி கிரியேஷன்ஸ்) சேர்ந்த நண்பன் பார்த்திபன் ‘’எல்லா பெண்களையும் கோடம்மா என்றும் (வீடு பெருக்கும் கன்னியம்மா முதல் குயின் எலிஸெபத் வரை அவனுக்கு கோடம்மாதான்)….எல்லா ஆண்களையும் ‘’குப்பாச்சுலு’’ என்று செல்லமாக விளிப்பதுண்டு….எனது ‘’மை-லவ்வாப்பூர்’’(சுஜாதா சாரின் ‘’ஸ்ரீரங்கத்து தேவதைகள் இராமுருகனின் ‘’ரெட்டைத் தெரு’’ ஜாடை) டைம்ஸில் எழுத உத்தேசம்….அதற்கு இந்த குறிப்பு ‘’நெட்-ப்ராக்டீஸ்’’…..இனி வெண்பா….
‘’அப்பாச்சி(ஜாடையில் நேடிவ் அமெரிக்கன்) கண்ணனாய், ஆவை(பசுவை) அசுவமாய் (குதிரையாய்) – துப்பாக்கி நூறைத்(100RIFLES துரியோதனன் & கோ) தொலைக்கவும் , -குப்பாச்சுலு-பார்த்திபன்தேர் பூட்ட பரந்தாமர், டோக்கியோவின்(ஜப்பான் ஜாடையும் கண்ணனுக்கு இருப்பதால்) – தீர்த்தக் கரைதனில் திட் டம்’’….கிரேசி மோகன்….!
* -ஈசர் நரியை பரியாக்கும் போது அவர் மைத்துனர் பெருமாள் ‘’ஆவை(பசுவை) அசுவன்(குதிரை) ஆக்கக் கூடாதா….!