உமையாள் திருப்புகழ் -7
விவேக்பாரதி
தான தந்தன தானா தனாதன
…தான தந்தன தானா தனாதன
…..தான தந்தன தானா தனாதன – தனதானா !
சீறு மங்கர வோடே சடாமுடி
…சீத ளம்பயி லாதே நிலாவொடு
…….சீவ னந்தக னோடே யுலாவிடு – சிவதேவீ !
தீது மெங்கிலு மூடே யெழாதற
…தீரு மந்நிலை மாதே அழாதிர
…….தீர மென்றிட மாரே விழாதுற – அருள்தாராய் !
ஏறு மங்கரி காடே புகாதரு
…ளேகி யெம்மன நாடே சடாரென
……ஏறி அந்திரி நீயே தயாபரி – வரவேணும்
ஏம மென்றுமெ சாகா துராவிட
…ஏடி சங்கரி மாயே அடாசிடு
……ஏத மென்றிடு தீயே சுடாதுற – உனைநாடி
நீற ணிந்திடு வோமே கனாவிடை
…நீளு மெம்மட நாவே கெடாமொழி
…….நீவ ழங்கிடு வாயே பராபரை ! – பணிவோமே
நீச மென்றிடு நோயே படாதுயர்
…நீல கண்டனைப் போலே யுலாவிட
……நீய ருள்தரு வாயே தடாகமு – முறைமாதே !
ஊற றுந்திட ஊழே தொடாதுற
…ஊரெ ழுந்திட நீயே வொரேகதி
…….ஊமை யெங்களின் வாயே சொலாமொழி – மொழிவாயே
ஊசி தன்னிடை நீயே நியாயமு
…மூரி லிங்ஙண மேவீ விழாவுற
……வூப மென்றிட வாராய்க் கபாலியி – னுமையாளே !