கண்ணன்
’’அய்யங்காரர்களுக்கு இன்று ஸ்ரீஜயந்தி….வைஷ்ணவ ஜனதோவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’’….!
“ஏறுமயில் ஏறிவிளை யாடும்முகம் ஒன்று” மெட்டில் எழுதியது….
கண்ணன் திருப் புகழ்
————————–
“கோலுயர கன்றுகளை காத்தமுகம் ஒன்று
கோபியர்கள் கூட்டமதில் கொஞ்சுமுகம் ஒன்று
நீலயமு னாநதியில் நீந்துமுகம் ஒன்று
நச்சரவம் மீதுநட மாடும்முகம் ஒன்று
பால்நிலவு ராதைமுகம் பார்க்கும்முகம் ஒன்று
பாரமுலை பூதகியின் ப்ராணமுகம் ஒன்று
காலனென மாமனுயிர் கொண்டமுகம் ஒன்று
ஆலிலையில் பாலனென ஆழ்ந்தபெரு மாளே”….
’’ஏக பில்வம் சிவார்ப்பணம்’’
பில்வாஷ்டகம் படித்த பாதிப்பில் எழுதியது….
‘’ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….!
————————————————-
‘’சங்குசக்ரம் சாரங்கம் தெண்டம்வாள் நந்தகி
அங்கையேந்தும் அவதார விஷ்ணு
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(1)
‘’மூணுமோர் மறைகள் மீட்க மீனமாய்க் கடலுள் சென்ற
வானவைகுந்தனே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(2)
‘’கடல்கடைந்த போதன்று வடவரையை வழுவிடாது
உடல்சுமந்த ஆமையே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(3)
’’கொம்பிலே குவலயத்தை கால்சிலம்பில் கோள்குலுங்க
நெம்பிய வராகரே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(4)
‘’தானாடும் துட்டனைத் தரைமட்டம் ஆக்கிட
தூணாடும் துரைசிங்கனே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(5)
‘’வந்தபின் வரம்வாங்கி அந்தவான் உலகளந்த
அந்தணன் வாமனனே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(6)
’’ராமபரசு ராமஅரசு ராமபல ராமனாய்
நாமமொன்று நடிப்புவேறு
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(7)
‘’பூபாரம் போக்கவன்று பாரதப் போர்முடித்த
கோபாலக் கண்ணனே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(8)….கிரேசி மோகன்….!
———————————————————————-

