பணமற்ற பரிவர்த்தனைகளா அல்லது பணமே இல்லாத ஏடிஎம்களா?

0

பவள சங்கரி

தலையங்கம்

1000, 500 உரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டு 30 நாட்களாகிவிட்டன. இன்னும் அனைத்து ஏடிஎம் களும் முறையாகச் செயல்படவில்லை. அனைத்து வங்கிகளிலும் புதிய 2000, 500, 100 உரூபாய் நோட்டுகளும், அவரவர் வங்கிக் கணக்கில் தொகை எவ்வளவு இருப்பினும் ரேசன் முறையில் மட்டுமே தரப்படுகிறது. சில வங்கிகளில் 20,000 உரூபாய், அல்லது 10,000 அல்லது 2000 மட்டுமே தரப்படுகிறது. இதற்கும் பல மணி நேரங்கள் வரிசையில் வங்கிக்கு வெளியே நிற்கவேண்டியுள்ளது. வங்கி வாசல்களில் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்திக்கொண்டு மிக நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இதில் வருகிற சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை வேறு. ஏடிஎம்மிலும் பணம் கிடைக்காமல் மக்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிறது. பணமற்ற பரிவர்த்தனைத் திட்டம் இயல்பாகும் இடைக்காலத்தில் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கவனம் கொள்ளவேண்டியது அவசியம். ஆண்டிற்கு சுமாராக 75 இலட்சம் கோடி பணமாகப் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இவ்வளவு பெரியத்தொகை முழுவதும் பணமற்ற பரிவர்த்தனையாக மாறும்போது அதற்குரிய வங்கிகளுக்கோ அல்லது நிதி நிறுவனங்களுக்கோ (Paytm, geo finance, other wallets) கட்டணமாகச் செலுத்தவேண்டியத்தொகை ஒன்றரை இலட்சம் கோடி. மக்களின் இந்தச் சுமையைத்தான் அந்த நிறுவனங்கள் வருமானமாகப் பெறுகின்றன. அரசு சலுகைகள் மூலம் மக்களின் இதுபோன்ற சுமைகளைக் குறைக்கும்போது இது போன்ற நவீனத் திட்டங்களை ஏற்பதில் உள்ள சிக்கல்கள் பெருமளவில் குறையும் என்பதில் ஐயமில்லை. அன்றாடத் தேவைகளான வாகனங்களின் எரிபொருள் நிரப்புவதற்கும், சுங்கச் சாவடிகளில் பணப்பரிவர்த்தனை அட்டை பயன்படுத்துதற்கும், வங்கிகளிலும் மின்னஞ்சல் பணப்பரிமாற்றங்களுக்கும் வசூலிக்கப்படும் கட்டணம் பெருஞ்சுமையை ஏற்படுத்திவிடுகிறது. இந்தக் கட்டணங்களை முழுவதுமாக தள்ளுபடி செய்து கட்டணமில்லா பரிவர்த்தனையை அரசு ஊக்குவிக்க வேண்டியதும் அவசியமாகிறது. மேலும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளிளாவது (தலைமை வங்கியாகிய ஸ்டேட் வங்கி போன்றவை) தள்ளுபடியை ஊக்குவிக்கலாமே.

உரூ 2000 புது நோட்டுகள் பெருந்தொகைகளாக கைப்பற்றப்படுகிறதே.. ஒரு சந்தேகம். இவையனைத்தும் புத்தம் புது நோட்டுகள்.. அதில் இருக்கும் சீரியல் எண்கள் குறிப்பிட்ட வங்கிகளுக்கு அனுப்பப்படும்போது நோட்டு எண்களை குறித்துக்கொண்டுதானே அனுப்புவார்கள். ஆக எந்த வங்கியிலிருந்து அந்த நோட்டுகள் வெளியே சென்றது என்பதை அறிய முடியும் அல்லவா? பின் ஏன் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை? ஒருவேளை அப்படி எண்கள் உரூபாய் நோட்டுகளிலிருந்து குறிக்கப்படுவதில்லை என்றால் அதற்கு ஏதும் காரணம் உள்ளதா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.