கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”தாய்க்குப் பணிந்தன்று தாம்பில் நடந்தரக்கன்
சாய்க்கக் கடைந்தவன் சாகஸன் – ஆய்க்குல
மாதாவைக் கட்டினன் மாயக் கயிற்றினால்
கோதை அறி(ரி)வாள்(ல்) குறும்பு”….கிரேசி மோகன்….!
”கோதைக் காப்பு”
———————————
”கயிற்றுதரக் கண்ணன்மேல் காதல்கொண்(டு) அன்று
இயற்றினாய் பாடல் எமக்காய் -பயிற்றுவித்த
தாதையுடன் சென்றந்த கீதையோன் கைப்பிடித்த
கோதைக்கை கோகிலமே காப்பு”….கிரேசி மோகன்….!