170113 - Tiruppavai 29 - Sitranchirukalé vandunnai

’’பாற்கடல் பள்ளி, பரமபத சோபானர்
நூற்கடல்நா லாயிர நாயகர், -பாற்குடல்
கன்றுகள் மேய்த்தவர், கண்ணனென் காதலர்,
என்றுமவர் கேள்வர் எனக்கு’’…..

கேள்வர் -கணவர்(Eternal Companion)

எங்கிருந்தோ வந்தென் இதயம் புகுந்தோனை
சங்கிருக்கும் கையானை சாரங்கனை -திங்கள்நன்
மார்கழியில் பாடி மணம்புரிந்த ஆண்டாளே
நேர்வழியில் எம்மை நடத்து….

 
“பழையன விட்டு புதியன பூண
மழையன்ன மாலின் மனையாய்-விழைகிறாள்
புள்ளேறி வைகுந்த புக்ககம் போவதற்கு
கள்ளுறும் பாசுரத்தாள் காண்”….

 
“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார்
பாடி இடம்பிடித்தாள் பாற்கடலில்; -ஆடிப்பூ
ரத்தாள் பதம்பிடித்து ரங்கன் அழைக்கின்றான்
அத்தாளை அம்மிமிதிக் க “….

 
“கீதைக்(கு) இணையான ,கோதை திருப்பாவை
போதை தலைக்கேற புள்ளேறி -தாதை
பெரியாழ்வார் இல்லம் பறந்துபோய் கேட்டான்
தரியாஓய்! பெண்ணை தனக்கு”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *