பவள சங்கரி

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தனிப்பட்ட முயற்சியினால் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுப் பொருட்கள் மூலம் சாலை போடும் நவீன தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து அதன் பயன்படுத்தி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே அதைப் பயன்படுத்தி மெய்ப்பித்துக் காட்டியிருந்தும் இன்னும் அந்த முறை ஏன் இன்னும் பயன்பாட்டிற்கு வரவேயில்லை? இதையெல்லாம் யாரிடம் சென்று கேட்பது. தார் சாலைகள் மழைக்காலங்களில் குண்டும் குழியுமாக மாறிவிடும். ஆனால் இந்த நெகிழிச் சாலைகள் அதுபோன்று ஆவதில்லை என்கிறார்கள். அதைவிட முக்கியமாக நெகிழிக் கழிவுகளை அழிப்பதற்கு படும் சிரமங்களும் குறைவதோடு பாதுகக்கப்பட்ட சாலைகளும் கிடைக்குமே.. இதில் என்ன பிரச்சனை? பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த முறையில் சாலை போட்டு நிரூபித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.