பாலில் கலப்படம்?
பவள சங்கரி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அன்றாடம் உபயோகிக்கும் பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களில் கலப்படம் செய்கிறார்களா என்ற ஐயமே பெரும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது. ஆனால் இன்று பால் கலப்படம் செய்யப்பட்டு வருகிறது என்று உறுதியாக நம்பும் சூழல் ஏற்பட்டுவந்துள்ள நிலையில் இதற்கு எதிரான போராட்டத்தை நாம் முன்னெடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கலப்படப்பாலுக்கு எதிராகப் போராடவேண்டிய நேரம் இது என்பதை நம்பும் கேரள மாநிலத்திற்குள் ஒரு சொட்டு கலப்படப்பால்கூட செல்ல முடியாது. அதனுடைய எல்லைகளைச்சுற்றி நடமாடும் ஆய்வூர்திகளை வைத்துப் பரிசோதனை செய்தே அனுமதிக்கின்றனர். முன்பு தமிழகத்திலிருந்து சென்ற காய்கறிகளை, இராசயண உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி தடை செய்தனர். கேரளாவைப் பின்பற்றி தெலுங்கானாவும் இந்த கலப்படப்பாலுக்கு எதிரான போரினை ஆரம்பித்துள்ளனர். நமது பால்வளத் துறை அமைச்சர் இனி எப்போது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?