கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’கண்டவர் விண்டிலர்(சொல்லார்) விண்டவர் கண்டிலர்(காணார்) -திருமூலர்….தான் கண்ட மூலவரை(பெருமாளை) உற்சவராய்(கண்ணன்) வரைந்து நாம் கண்டிட வரைந்து விண்டுரைக்கும் கேசவ் ‘’திருமூலவர்”….!
”ஆலிலை மெத்தையாய்,’’ஆ’’வே தலையணையாய்,
மாலிவர் கண்ணன் மயங்குதலை, -காலையில்
கண்டு பரவசம் கொண்டேன்,தான் கண்டதை
விண்டது கேசவ் விரல்’’….கிரேசி மோகன்….!
—————————————-
”பேருண்மை, மாயப் பெரும்பொய் பிரகிருதி,
வேரொன்றும் இல்லா விருக்ஷமவர், -யாரென்று
கேட்டால் விளம்பிடுவோம், கேசவர் தானந்த,
சேட்டை புரிகின்ற சேய்”….கிரேசி மோகன்….!