நில்லடா வெல்லடா நீ
மு. மகாலிங்கம்.
முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர்-46
போர்க்களம் வந்து போர்செய் விடியலுக்கு
போரா எதற்கு போடா விடியுமடா
அந்தணன் வந்தான் அகிலம் தனைப்படைத்தான்
அந்நா ளொடுஇந்நாள் அந்தணன்தான் ஆண்டவன்
பிந்தயவன் வந்தான் பிறிதொறு விதிசெய்தான்
வந்தவனும் முன்னவனும் வருவானும் பின்னவனும்
இன்பமாய் வாழ்கின்றார் இந்நாட்டில் எம்வீட்டில்
துன்பம் துயரம் துடைப்பது யாரோ
வலிமை உனக்கு வலியா தமிழா
வலிமை வலியல்ல வாளடா வாழடா
செத்தது போதும் செருக்களம் நோக்கிவாடா
வந்து வலிவாளால் வீழ்த்தடா- பாயும்
புலியாய் மதகரியாய் பல்லரியாய் வீர்பரியாய்
நில்லடா வெல்லடா நீ.