கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
களிப்பில் திளைத்துக் களைத்துச் சலித்துப்
புளிக்கும் பழமாம்இப் பூமி -ஒளித்த
நிலத்தை வராகமாய் நெம்பிய ஆயர்
குலத்தோனின் கால்கண்கை கூப்பு….
உதித்தவா நேற்று, மிதித்தவா இன்று,
நதிக்கரை நந்தகோபன் நாட்டை :-எதிர்த்ததாய்
மாமா அனுப்பிய மல்லர் களையன்று
கோமாளி ஆக்கியவா காப்பு….கிரேசி மோகன்….!